லொறி, பேருந்து விபத்து – ஒருவர் பலி

தம்பகல்ல களுகஹராவ பகுதியில் லொறியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில், லொறியில் பயணித்த மூவர் காயமடைந்து தம்பகல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 26 வயதுடைய புத்தல பிரதேசத்தைச் சேர்ந்தவா் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply