வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகரிப்பு- மனுஷ நாணயக்கார!

தற்போது 12 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு வேலை வாய்ப்பு அனுமதிபத்திரங்கள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த தொழில் வாய்ப்பு பத்திரங்கள் 41 நாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் , இவ் வருத்தில் 3 இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்புவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு திறன்களை வளர்த்து தகுதியான இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் வகையில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

T02

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply