நீட்டிக்கப்படுகின்றதா பொலிஸ் மா அதிபரின் சேவை காலம்!

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு இரண்டாவது சேவை நீடிப்பு வழங்கப்படவுள்ளதாக அரசாங்க வாட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவரது சேவைக்காலம் இன்றுடன் (26) முடிவடையும் நிலையில், புதிய பொலிஸ் மா அதிபர் தொடர்பில் அரசியலமைப்பு சபைக்கு இதுவரை எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

இது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிக்கையில், புதிய பொலிஸ் மா அதிபர் தொடர்பில் ஜனாதிபதி வருகையின் பின்னர் கலந்துரையாடப்படும் என தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மார்ச் 26 அன்று ஓய்வு பெறவிருந்த நிலையில், அரசாங்கம் அவருக்கு மூன்று மாத சேவை நீடிக்கப்பை வழங்கியிருந்தது.

குறித்த சேவை நீடிப்பு இன்று முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply