திமுத் மற்றும் ஹசரங்கவின் அதிரடி ஆட்டம் – இலங்கை அணிக்கு 133 ஓட்டங்களால் இலகு வெற்றி!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் சுற்றுப்போட்டியில், இன்று இலங்கை மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் இலங்கை அணி 133 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இப் போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 325 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில், அதிகபடியாக திமுத் கருணாரத்ன 103 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் திமுத் கருணாரத்ன பெற்ற முதலாவது சதம் இதுவாகும்.

இவர், 103 பந்துகளுக்கு முகங்கொடுத்து 8 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 103 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

அத்துடன், சதீர சமரவிக்ரம 82 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் அயர்லாந்து அணியின் மார்க் அடேர் 46 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களையும், பெர்ரி மெக்கார்த்தி 56 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்தநிலையில், 326 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 31 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 192 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

அணிசார்பில், அதிகபடியாக கர்டிஸ் கேம்பர் 39 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 75 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply