குறைவடைகிறது மருந்துகளின் விலை – வெளியானது வர்த்தமானி!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 60 வகையான மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 15ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று முதல் 16 வீதத்தால் குறைக்கப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொலரின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், 500 மில்லிகிராம் எடையுள்ள பரசிட்டமோல் மாத்திரை ஒன்றின் விலை 3 ரூபா 49 சதமாக கணக்கிடப்பட்டுள்ள அதேவேளை, இன்சுலின் 10 மில்லிகிராம் குப்பியின் அதிகபட்ச சில்லறை விலை 2,270 ரூபா 2 சதமாகும்.

375 மில்லி கிராம் அமோக்ஸிசிலின் கிளாவுலானிக் அமிலத்தின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.70.32 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply