இளம் பெண்களை ஏமாற்றி பணம் பறித்தவர் கைது

பேஸ்புக்கில் இளம் பெண்களுடன் காதல் உறவை ஏற்படுத்தி, அவர்களை ஏமாற்றி, நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்று, மிரட்டி பணம் பறித்த நபர் ஒருவர் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர், அவிசாவளை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேகநபர், பேஸ்புக் மூலம் இளம் பெண்களுடன் தொடர்புகொண்டு, அவா்களை விடுதிகளுக்கு அழைத்துச் சென்று நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து, பின்னர் அவற்றைக் காட்டி பயமுறுத்தி, பணம் கேட்டதாகவும், பணம் தராவிட்டால், இணையத்தில் பதிவிடப் போவதாகவும் கூறி மிரட்டியுள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த சந்தேகநபர், அவிசாவளை பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய யுவதி ஒருவருடன் பேஸ்புக் மூலம் காதல் கொண்டு, அந்த பெண்ணின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து பின்னர் 2 லட்சம் ரூபாய்களை அவரிடமிருந்து பறித்துள்ளார்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்,பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். இதற்கமைய குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரின், நவீன கையடக்கத் தொலைபேசியை ஆய்வு செய்து பார்த்தபோது, அவர் பல இளம் பெண்களின் நிர்வாண புகைப்படங்களை தொலைபேசியில் வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply