மக்கள் முடிவிற்கு விடப்பட்டுள்ள உத்தேச மின் கட்டண திருத்தம்!

இலங்கையின் மின் கட்டண திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்து பதிவு செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று முதல் உத்தேச மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொது மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ளது.

முற்பகல் 9.30 முதல் மாலை 4.30 மணி வரை பொது மக்களுக்கு கருத்துக்களை பதிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் மிஹிலக்க அறையில் உத்தேச மின்கட்டண திருத்தத்திற்கு பொது மக்கள் தங்களது கருத்துக்களை வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply