ஒருநாள் சேவையின் கீழ் பெறப்படும் கடவுச்சீட்டுக்கான கட்டணங்களைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு நாள் சேவை மூலம் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வதற்கு தற்போது 20,000 ரூபா கட்டணம் அறவிடப்படுகின்றது.
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட, பிரதேச செயலாளர் அலுவலகத்தின் மூலம் ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கும் நடைமுறையில், அதனைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது, என்று குடிவரவு, குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹவர் இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
அதற்கமைய 20 ஆயிரம் ரூபாவிலிருந்து 15 ஆயிரம் ரூபாவாகக் கட்டணம் குறைக்கப்படவுள்ளது, என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.