திருமண மண்டபத்திற்கு புல்டோசரில் வந்த மணமகன்- அபராதம் விதித்த பொலிஸார்

திருமண மண்டபத்திற்கு புல்டோசரில் வந்த இன்ஜினியர் மணமகனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் பிடுல் மாவட்டம் ஜலர் கிராமத்தை சேர்ந்த சிவில் இன்ஜினியரான அங்குஷ் ஜெய்ஸ்வால் என்பவர், திருமண நாளன்று திருமண மண்டபத்திற்கு  புல்டோசரில் வந்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில், புல்டோசர் ஓட்டுனர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்ததுடன் , 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply