விஷமடைந்த உணவை உட்கொண்ட பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

பாடசாலையொன்றில் உணவு விஷமடைந்தமையினால் 40இற்கும் அதிக மாணவர்கள் சுகவீனமடைந்துள்ள சம்பவம் ஒன்று மகா ஓயா நில்லம்ப பகுதியில் இன்று பதிவாகியுள்ளது.

சுகயீனமடைந்த மாணவர்கள் தற்போது மகா ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அப்பிரதேச பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாடசாலை மாணவர்கள் இன்றுகாலை பாடசாலையில் உணவை உட்கொண்ட பின்னரே இவ்வாறு சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply