கட்டார் வாகன விபத்தில் இலங்கையர் பலி!

கட்டாரில் நேற்றையதினம் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவத்தில் உயிரிழந்தவர் அம்பாறை- கல்முனை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய குடும்பஸ்தர் என்பதும் ஒரு பிள்ளையின் தந்தை என்பதும் தெரியவந்துள்ளது.

வாகனத்தில் மூன்று பேர் சென்றுகொண்டிருந்த போதே குறித்த விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய இருவரும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply