வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்த பெண் கைது

போலந்தில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, 13 மில்லியன் ரூபாய் மோசடி செய்த பெண் ஒருவர், இந்தியாவில் இருந்து திரும்பியபோது, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இவருக்கு எதிராக 53 முறைப்பாடுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட பெண், பத்தரமுல்லையில் வசிக்கும் 44 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply