இலங்கை இளைஞர்களுக்கு கட்டாரில் நேர்ந்த சோகம் !

தொழிலுக்காக கட்டாருக்கு சென்ற இளைஞர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி தெரிவித்துள்ளன.

காட்டாரில் குறித்த இரு இளைஞர்களும் தங்கியிருந்த இடத்திலேயே இவ்வாறு மர்மமான முறையில் சடலமாக மீட்கப்படுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.

இரு இளைஞர்களும் தொடர்ந்து இரு நாட்களாக வேலைக்கு வராத காரணத்தால் இளைஞர்கள் தங்கியிருந்த அறைக்குள் சென்று பார்த்தபோது அங்கு இருவரும் சடலமாக கிடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த ஒவர் விசுவமடு – இளங்கோபுரம் பகுதியை சேர்ந்த 21 வயது சிவகுமார் தர்சன் என்பது தெரியவந்துள்ளதுடன் உயிரிழந்த மற்றைய இளைஞர் தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply