மனித எச்சங்கள் மற்றும் பெண் போராளிகளின் சீருடைகள் மீட்பு – நேரில் சென்று பார்வையிட்டார் கஜேந்திரன்

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்

கொக்குத்தொடுவாய் மத்தியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் குடிநீர் குழாய் பொருத்துவதற்காக நிலத்தை தோண்டிய போது புதைக்கப்பட்டிருந்த மனித எலும்புகளும் பெண் போராளிகளின் சீருடைகள் சிலவும் வெளிவந்துள்ளது.

இப்பகுதிக்கு இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் செயற்பாட்டாளர்கள் சென்று நிலைமைகளை பார்வையிட்டனர்.

இதேவேளை, இவ்விடத்தில் மேலும் பலர் புதைக்கப்பட்டிருக்கலாமெனவும் இதுவொரு மனிதப்புதைகுழியாக இருக்கலாமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply