கொழும்பு, களுத்துறை உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்!

இலங்கையின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து 1,200 கிலோமீற்றர் தொலைவில் ஆழ்கடலில் 5.8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த நிலநடுக்கம் களுத்துறை, பாணந்துறை, பம்பலப்பிட்டி மற்றும் கொழும்பை சூழவுள்ள பல பகுதிகளில் சிறிதளவு உணரப்பட்டுள்ளதாக அந்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply