13 ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு!

இலங்கை அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 13 ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ் பொது நூலகத்தை பார்வையிட்ட பின் ஊடகவியலாளர்களைச் சாந்தித்து கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” 13 ஆவது திருத்தத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ் கட்சிகள் கோரிக்கை முன்வைக்கின்ற நிலையில் அது அரசியல் அமைப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.

அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 13ஐ நடைமுறைப்படுத்துவதற்கு தற்போதய அரசாங்கம் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

ஆகவே நாங்கள் அரசாங்கத்தில் இல்லாவிட்டாலும் 13 ஐ நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவு வழங்குவோம் ” எனக் குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply