அமெரிக்காவின் ஃபிலடெல்பியா நகரில் துப்பாக்கி சூடு – நால்வர் பலி

அமெரிக்காவின் ஃபிலடெல்பியா நகரில் இனந்தெரியத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்க நேரப்படி, நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் செஸ்டர் அவென்யு பகுதியில், 40 வயதுடைய நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்துவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த துப்பாக்கிதாரியைக் கைது செய்தனர்.

குறித்த துப்பாக்கிதாரியை நோக்கி உரிமம் பெறாத துப்பாக்கியால் சுட்ட பாதசாரி ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் 2 வயது குழந்தையும், 13 வயது சிறுவனும் காயமடைந்துள்ளதாகவும், துப்பாக்கி சூடு நடத்தியவருக்கும், உயிரிழந்தவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply