சமல் ராஜபக்ஷ தொடர்பில் நாடாளுமன்றத்தின் செயலாளர் அம்பலப்படுத்தியுள்ள விடயம்!

கடன் மறுசீரமைப்புத் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக சமல் ராஜபக்ஷ வாக்களித்தமை தற்போது அம்பலமாகியுள்ளது.

எனினும் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் போது நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ சபையில் இருக்கவில்லை என ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையிலேயே ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பிற்கான தீர்மானம் கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் 66 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

இந்த உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பிற்கான தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ கலந்துகொண்டதாகவும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply