நுவரெலியா மாவட்டத்திற்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

நுவரெலியா மாவட்டத்திற்கு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று மண்சரிவு அபாய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

குறித்த எச்சரிக்கை நாளை காலை 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.

அதன்படி, 2 ஆம் நிலை (ஆம்பர்) எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் மக்கள், தேவை ஏற்பட்டால் பாதுகாப்பான இடத்துக்கு இடம்பெயர தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுக்கு மட்டம் 1 (மஞ்சள்) மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் மண்சரிவுகள், பாறை சரிவுகள், வெட்டுக்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இப்பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply