அண்ணணை வெட்டிக் கொன்ற தம்பி

பொலன்னறுவையைச் சேர்ந்த 25 வயதுடைய நபரொருவர், அவரது தம்பியாரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம், நேற்று இரவு, பொலன்னறுவை பெலட்டியாவவில் அவர்களது வீட்டில் நிகழ்ந்துள்ளது.

வாக்குவாதத்தை அடுத்து தம்பியார் தனது அண்ணனை கத்தியால் குத்தியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த நபர், தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விசாரணையில், தம்பியார் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது.

சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மானம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply