கணனி கொள்ளையில் ஈடுபட்ட பாடசாலை மாணவர்கள் கைது

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை தெய்வ கந்த தமிழ் வித்தியாலயத்தில் கடந்த 4 ஆம் திகதி கணினி கொள்ளை அடித்து சென்றதை தொடர்ந்து, பாடசாலை அதிபர் அன்றைய தினம் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார பணிப்புரையின் படி மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன்படி, குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் அப் பகுதியில் உள்ள மூன்று பாடசாலை மாணவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில், கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

சந்தேக நபர்கள் மூன்று பேரும் முறையே 16,16,19 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து கைப்பற்றபட்ட கணணிகள் இன்றைய தினம் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply