முல்லைத்தீவின் புதிய அரசாங்க அதிபராக கடமைகளை பொறுப்பேற்றார் உமாமகேஸ்வரன்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் அருளானந்தம் உமாமகேஸ்வரன், தமது கடமைகளை இன்று பொறுப்பேற்றுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பற்ற இந்த நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.ஜகு, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் (காணி), மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திரு.மு.முபாரக், மாவட்ட பிரதம கணக்காளர் திரு.ம.செல்வரட்ணம், மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு. லிங்கேஸ்வரன், உலக உணவுத்திட்டத்தின் மாவட்ட அலுவலகரும் மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.ஜெயபவாணி, உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்

அருளானந்தம் உமாமகேஸ்வரன் முன்னதாக இந்து சமய கலாச்சார அலுவலக திணைக்கள பணிப்பாளராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply