புதிய அரசாங்க அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்!

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக சிந்தக்க அபேவிக்ரம இன்று (10) திங்கட்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இப் பதவியேற்கும் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன் அடங்களாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களின் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த ஜே.எம்.ஏ.டக்ளஸ் ஓய்வுபெற்றுச் சென்ற நிலையில் சிந்தக்க அபேவிக்ரம புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார்.

இவர் தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தார் எனப்து குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply