நைஜீரியாவில் பேருந்து விபத்து – 20 பேர் பலி

நைஜீரியாவின் தென்மேற்கு மாகாணத்தின் லாகோஸ் – படக்ரி தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்து மோவோ நகர் அருகே சென்றபோது முன்னால் சென்ற மணல் லொறியைக் கடக்க முயன்ற நிலையில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து  லொறி மீது மோதியுள்ளது.

இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் ஏனையோர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நைஜீரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply