28 மில்லியன் பெறுமதியான தங்க நகைகளுடன் வர்த்தகர்கள் இருவர் கைது 

28 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளை கடத்த முற்பட்ட வர்த்தகர்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலைய வருகை அறையில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கொழும்பு வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய இரு வர்த்தகர்களும் அடிக்கடி இலங்கைக்கு வருகை தருவதாகவும்,  உள்ளூர் சந்தையில் அவற்றை விற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு சந்தேக நபர்களும் இன்று அதிகாலை 2.20 மணியளவில் இந்தியாவின் சென்னையில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானமான AI-273 இல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் ஒரு கிலோ 780 கிராம் எடையுள்ள இந்த நகைகளை அவர்களது லக்கேஜில் அடைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

சந்தேகநபர்கள் மற்றும் நகைகள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply