காணாமல் போன டென்மார்க் பெண்ணின் சடலம் மீட்பு

கடுகன்னாவ அலகல்ல மலைப் பகுதியில் நடைபயணம் மேற்கொண்டபோது காணாமல் போனதாக கூறப்படும் 32 வயதுடைய டென்மார்க் பெண்ணின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை முதல் நடைபயணத்தின்போது குறித்த பெண் காணாமல் போனதை அடுத்து, பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து நேற்று தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

குறித்த பெண் மலையில் நடைபயணம் மேற்கொண்ட போது தவறி விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஜூன் 26 அன்று நாட்டிற்கு வந்த பெண் தனியாக சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார் எனவும், அவர் ஜூலை 10 ஆம் திகதி கண்டி பேக் பேக்கர்ஸ் விடுதிக்கு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த பெண் தான் நீண்ட நடைப் பயணம் செல்வதாக விடுதி நிர்வாகத்திடம் கூறியதாகவும், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு விடுதிக்கு திரும்பாத போது, நிர்வாகம் கண்டி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply