ஸ்பெயினில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ

ஸ்பெயினில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயினால் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காட்டுத் தீ பரவிய பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் குறித்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஸ்பெயினின் லா பால்மா தீவில் இருந்து 2500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சுமார் 4,500 ஹெக்டெயர் நிலம் தீயினால் அழிந்துள்ளதாக ஸ்பெயின் செய்திகள் தெரிவிக்கின்றன.

தீ பரவிய பகுதிகளில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply