அக்கரைப்பற்று கடற்பகுதியில் தீப்பிடித்து எரிந்த படகு – தேடும் பணியில் கடற்படையினர்

அக்கரைப்பற்று கடற்பகுதியில் தீப்பிடித்து எரிந்த படகு ஒன்றை தேடும் விசேட நடவடிக்கையை கடற்படையினர் ஆரம்பித்துள்ளனர்.

அக்கரைப்பற்று கடற்பரப்பில் படகு ஒன்று தீப்பிடித்து எரிவதாக கடற்படையினருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, திருகோணமலை கடற்படைத் தளத்துக்குச் சொந்தமான டோரா கப்பல் மூலம் குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் நள்ளிரவு ஒரு மணிக்குப் பின்னரும் தீப்பிடித்த படகு தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த பகுதியில் கடற்படையினர் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply