போராட்டங்கள் காரணமாக தேசிய மருத்துவ மனைகளுக்கு பலத்த பாதுகாப்பு!

போராட்டங்கள் காரணமாக தேசிய மருத்துவமனை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை வழங்குவதற்கு எதிராக இன்று  முதல் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

தெரிவு செய்யப்பட்ட பல மருத்துவமனைகளைச் சேர்ந்த சுகாதாரத் துறை ஊழியர்களின் பங்கேற்புடன் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மடிவத்த தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், திட்டமிட்ட போராட்டத்தின் விளைவாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையைச் சுற்றி பாதுகாப்பை  பலப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply