எரிவாயு சிலிண்டர் திருட்டு!

வீட்டிலிருந்து எரிவாய் சிலிண்டர் திருடப்பட்ட சம்பவம் ஒன்று கச்சேரி நல்லூர் ஆசீர்வாதப்பர் வீதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

சமையலறையிலிருந்து   வெளிப்புறம் வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டரே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.

வீட்டின் உரிமையாளர் அதிகாலை தேநீர் வைப்பதற்காக அடுப்பினை பற்ற வைக்க முற்பட்ட பொழுது எரிவாயு சிலிண்டர் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

சம்வம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply