போலாந்து விமான நிலையத்தில் விமான விபத்து – ஐவர் பலி

போலந்தின் வார்சாவிற்கு அருகிலுள்ள விமானநிலையத்தில் சிறிய விமானம், விமானக் கொட்டகைக்குள் மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் போலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது, நேற்று மாலை  உள்ளூர் நேரப்படி 5.40 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் குறித்த விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் விமானத்தில் இருந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததோடு, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான விமானம் செஸ்னா 208 என்னும் விமானம் என போலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply