மொரட்டுவ பேருந்து விபத்து – ஐவர் காயம்

மொரட்டுவயில் இன்று காலை சரக்குகளை ஏற்றி வந்த கப் வண்டியொன்று பேருந்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை எகொட உயன பிரதேசத்தில் பெலவத்தை நோக்கி பயணித்த கப் வண்டியொன்று ரயரை மாற்றுவதற்காக வீதியோரத்தில் நின்ற பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் கப் வண்டியில் பயணித்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காயமடைந்த ஐவரில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருந்ததால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்ததோடு , கப் வண்டியின் சாரதி கவனயீனத்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எகொட உயன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply