சமநிலை பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்ட குமுதினிப் படகு!

குமுதினி படகின் சமநிலை பரிசோதனை வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் இடம்பெற்றுள்ளது.

குமுதினி படகின் சமநிலை பரிசோதனை, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பணிப்பாளர் ஜொய்ஸ் குறூஸ் முன்னிலையில், கப்பல் கட்டடக்கலை ஆலோசகர் கலாநிதி விமல்ஸ்ரீயினால் மேற்கொள்ளப்பட்டது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான குமுதினி படகு வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் வல்வெட்டித்துறை  நெடியகாட்டை சேர்ந்த சரவணபவன் என்பவரால் மீள் புனரமைப்பு செய்யப்பட்டது.

இதன்போது குமுதினி படகில் சுமார் 4 ஆயிரம் கிலோ சுமை மற்றும் 85 பயணிகள் ஏற்றப்பட்டு சுமார் 2 மணிநேரம் பரிசோதனை இடம்பெற்றுள்ளது.

பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் அடுத்துவரும் சில நாட்களில் குமுதினி படகு பயணிகள் சேவையில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply