நாடு தன்னிறைவு பெற்றுள்ளது: மஹிந்த அமரவீர

அரிசி, பச்சைப்பயறு, கௌபி, உளுந்து, குரக்கன், நிலக்கடலை போன்றவற்றில் நாடு தன்னிறைவு அடைந்துள்ளதால், இந்த ஆண்டு மீண்டும் இவற்றை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

2021 இல் இரசாயன உரங்கள் மீதான தடையால் அரிசி மற்றும் பிற உள்ளூர் உணவுப் பயிர் உற்பத்தி வீழ்ச்சியடைந்ததன் காரணமாக, 2022 இல் 400 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 800,000 தொன் அரிசி இலங்கையால் இறக்குமதி செய்யப்பட்டது. இதேபோல்,ஏனைய உணவுப் பயிர்களும் இறக்குமதி செய்யப்பட வேண்டியிருந்தது. .

அதன்படி, 2023ம் ஆண்டு வரை அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை.

இந்த நாட்டுக்கான அரிசியின் ஆண்டுத் தேவை 2.4 மில்லியன் தொன்கள். கடந்த மகா பருவ அறுவடையின் மூலம் 2.7 மில்லியன் தொன் அரிசியை உற்பத்தி செய்ய முடிந்துள்ளது. எனவே இவ்வருடம் மீண்டும் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை.

இந்த நாட்டில் ஆண்டுக்கு 20,000 தொன் பச்சைப்பயறு தேவை. இவ்வருடத்தில், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பச்சைப்பயறு செய்கை பரவலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இடைக்காலப் பருவத்தில் பல மாவட்டங்களில் பச்சைப்பயறு செய்கைக்குத் தேவையான வசதிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் மட்டும் 13,439 டன் பச்சைப்பயறு அறுவடை செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் வருடாந்த கௌபியின் தேவை 15,000 தொன்களாகும். விவசாயத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, இந்த ஆண்டு நாட்டின் கௌபி உற்பத்தி 13,740 தொன்களாகும்.

இந்த நாட்டில் உளுந்தின் ஆண்டுத் தேவை 20,000 தொன்கள். 2023 ஆம் ஆண்டில் உளுந்து அறுவடை 17,866 தொன்கள் ஆகும்.

இந்த நாட்டில் நிலக்கடலையின் ஆண்டுத் தேவை 35,000 தொன்கள். இந்த ஆண்டு நிலக்கடலை அறுவடை 36,498 தொன்களாகும்.

இந்த நாட்டில் குரக்கனின் ஆண்டுத் தேவை 10,000 தொன்கள். இந்த ஆண்டு குரக்கன் அறுவடை 6,408 மெற்ரிக் தொன்னை எட்டியுள்ளது என்றார்.

மேலும், பச்சைப்பயறு, கௌபி, உளுந்து போன்ற பயிர்களை பயிரிட விவசாயிகளை ஊக்குவித்து, தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, இம்முறை ஆண்டுக்கு பின் பயிரிடப்படும் இடைப்பட்ட பருவத்தில் கூடுதல் பயிர்களை பயிரிடுவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு அமைச்சர் அமரவீர விவசாய திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply