பெரு ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்

பெரு அதிபர் டினா பொலுவார்டேவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

டினா பொலுவார்டேவை பதவி விலக வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பெட்ரோ காஸ்டில்லோவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட டினா பொலுவார்டே, எதிர்கட்சி ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றினார்.

அதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட பெட்ரோ காஸ்டில்லோவை விடுவிக்கக்கோரியும், மீண்டும் தேர்தல் நடத்த வலியுறுத்தியும் நடைபெற்ற போராட்டங்களில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

போராட்டத்தின்போது, தலைநகர் லிமாவில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்கள்  பொலிஸாரால் அப்புறப்படுத்தப்பட்டனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply