புதிய இறப்பு சான்றிதழ் – அடுத்த வாரம் முதல் விநியோகிக்க நடவடிக்கை!

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கமைவாக, தயாரிக்கப்படும் புதிய இறப்புச் சான்றிதழை அடுத்த வாரம் முதற் கொண்டு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை திடீர் மரண பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய இறப்புச் சான்றிதழை சுகாதார அமைச்சு, நீதி அமைச்சு, பதிவாளர் நாயகத் திணைக்களம் மற்றும் மரண பரிசோதகர்கள் சங்கம் ஆகியன இணைந்து தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

12 பிரதான விடயங்கள், 24 உப விடயங்களை உள்ளடக்கியதாக இந்த இறப்புச் சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ்களில் மரணத்திற்கான காரணம், இயற்கை மரணமா இல்லையா என்பனவே குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், புதிய இறப்புச் சான்றிதழில், உயிரிழந்த நபர் தொடர்பிலும் மரணத்திற்கான காரணம் தொடர்பிலும் குறிப்பிட வேண்டும் என்பதுடன், மரண விசாரணை அதிகாரிகளால் இறப்புச் சான்றிதழ்களில் பதிவிடப்படவும் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மரணத்திற்கான காரணத்தை நான்கு விடயங்களின் கீழ் விரிவாகக் குறிப்பிட வேண்டும் எனவும், உயிரிழப்பு இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இருந்து இடம்பெறும் அனைத்து மரணப் பரிசோதனைகளையும் புதிய இறப்புச் சான்றிதழ்களில் குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply