இந்தோனேசியாவில் படகு விபத்து – 15 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் படகு மூழ்கியதில் ஏறக்குறைய 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 19 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த விபத்து இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்றதாகவும் படகில் 40 பேர் பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்கான காரணம்  இன்னமும் கண்டறியப்படவில்லை எனக் குறித்த நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஆறு பேரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply