மூடப்படுகிறது இலங்கைக்கான நோர்வே தூதரகம்!

கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் எதிர்வரும் 31 ஆம் திகதியில் இருந்து நிரந்தரமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம் இலங்கை மற்றும் மாலைதீவுடனான இருதரப்பு உறவுகளை கையாளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் உள்ள தனது பணிகளில் பல மாற்றங்களைச் செய்வதாகவும், கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் உட்பட ஐந்து வெளிநாட்டு தூதரங்களை மூடுவதாகவும் கடந்த ஆண்டு நோர்வே வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply