நைஜீரியாவில் எரிபொருள் தாங்கி வெடிப்பு – 8 பேர் பலி

நைஜீரியாவின் தெற்கு ஒண்டோ மாநிலத்தில் பெற்றோல் ஏற்றிக் கொண்டு சென்ற வாகனம் ஒன்று வெடித்துச் சிதறியதில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து நேற்று இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த எரிபொருள் தாங்கி சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, நேற்று தாங்கியிலிருந்து எரிபொருளை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது வெடித்து சிதறியுள்ளது.

மீட்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் கைத்தொலைபேசி வைத்திருந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இந்த விபத்தில், எரிபொருள் தாங்கியின் சாரதியும் உதவியாளரும் காயமின்றி தப்பியுள்ளனர்.

இறந்த அனைவரும் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகியுள்ளதாக நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply