புத்தளம் தொழிற்சாலையொன்றில் திடீர் தீ விபத்து!

புத்தளம் மதுரகம பிரதேசத்தில் உள்ள தென்னை நார் தொழிற்சாலையொன்றில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக  புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீ விபத்து  காற்றினால் பரவிய தீப்பொறியிலிருந்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த தீ விபத்தில் 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் இதுவரை உயிர்சேதம் எதுவும் ஏற்பட்டதான  தகவல் பொலிஸாரிடம் இருந்து வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply