இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி; மழையால் தடை!

கொழும்பில் நடைபெற்று வரும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் தடைபட்டுள்ளது.

பாகிஸ்தான் தனது துடுப்பாட்டத்தை ஆரம்பித்து முதல் இன்னிங்ஸில் 02 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது, ​​போட்டி மழையால் தடைப்பட்டது.

நேற்று ஆரம்பித்த குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை துடுப்பாட்டத்தை தெரிவு செய்து 166 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது.

முதலாவது டெஸ்டில் பிரகாசித்த தனஞ்சய டி சில்வா இந்த டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் நேற்றைய முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply