கூகுள் நிறுவனத்தின் செய்தி இயக்குநர் பதவி நீக்கம்

கூகுள் நிறுவனத்தில் ஏறக்குறைய 13 ஆண்டுகள் செய்தி இயக்குநராக பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாதவ் சின்னப்பா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கூகுள் நிறுவன ஊழியர்கள் 12 ஆயிரம் பேர் கடந்த ஜனவரி மாதம் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், உயர் பொறுப்பில் இருந்த ஒருவர் தற்போது விலக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது பற்றி சமூக வலைதளத்தில் பதிவிட்ட மாதவ் சின்னப்பா, 13 ஆண்டு காலத்தில் தமது குழுவால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் மன நிறைவை தருவதாக தெரிவித்துள்ளதோடு, சிறிது ஓய்வுக்கு பிறகு, இந்தியாவில் உள்ள தனது தாயாருடன் நேரத்தை செலவிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply