பேஸ்புக் நிறுவனத்துக்கு அபராதம் விதித்தது ஆஸ்திரேலிய நீதிமன்றம்

பேஸ்புக் நிறுவனம் 14 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என ஆஸ்திரேலியாவில் உள்ள பெடரல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஸ்மார்ட்போன் அப்ளிக்கேஷன் மூலம் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள், சரியான அறிவு இல்லாமல் சேகரிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்தே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மெட்டா நிறுவனத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவின் நுகர்வோர் ஆணையத்தால் குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் இந்த அப்ளிகேஷன் 2 லட்சத்து 71 ஆயிரம் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply