ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள் கைது

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 15 கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் இரண்டு பெண்கள் உட்பட ஒரு ஆணும் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஆனைக்கோட்டை மற்றும் உடுவில் மல்வம் பகுதியை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply