பெரும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் –  சுகாதாரத் தொழிற்சங்கங்கள் எச்சரிப்பு

ஊடகங்களுக்கு தகவல்களை வெளியிட வேண்டாம் என சுகாதார அமைச்சின் செயலாளரினால் அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து அனைத்து அரசாங்க வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் வியாழக்கிழமை மாபெரும் அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை முன்னெடுக்க சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

சுகாதார வல்லுநர்கள் சம்மேளனத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறை தொடர்பான சில தீவிரமான கவலைகளை களைவதற்கு போதுமான கால அவகாசம் இருந்த போதிலும் சுகாதார அதிகாரிகள் அவற்றை நிவர்த்தி செய்யத் தவறியுள்ளனர்.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, மருந்துகள் தட்டுப்பாடு, மருந்துகளின் தரம் போன்ற பாரதூரமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, எதிர்வரும் வியாழக்கிழமை வேலைநிறுத்த போராட்டத்தைத் தொடங்கவுள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply