துருக்கியில் பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்து – 7 பேர் உயிரிழப்பு

துருக்கியில் கிழக்கு கார்ஸ் மாகாணத்தின் எர்சுரம்-கார்ஸ் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த இந்த பேருந்தில் 40 க்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

துருக்கியின் காராகுட் என்ற இடத்துக்கு அருகே சென்று கொண்டிருந்த போது பேருந்து திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து சம்பவித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியோரம் இருந்த பள்ளத்தில்  கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் 23 பேர் காயங்களுக்குள்ளாகிய நிலையில்  சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை துருக்கி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply