சட்டவிரோதமாக இத்தாலி செல்ல முயற்சித்த யாழ் தம்பதியினர் கைது!

யாழ்ப்பாணம், சங்கானைப் பிரதேசத்தில் வசிக்கும்  இளம் தம்பதியினர் இருவர் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலிக்குச் செல்ல முயன்றபோது குடிவரவு மற்றும் குடியகல்வு  அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தம்பதியினர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களின் பயணப்பொதிகளை சோதனையிட்டபோது, இளைஞனிடம் இருந்து பொய்யான தகவல்களுடன் தயாரிக்கப்பட்ட இரண்டு கடவுச்சீட்டுகளும் போலி விசாவும், குறித்த யுவதியை சோதனைக்குட்படுத்தியபோது  அவரது உள்ளாடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி இத்தாலி விசாவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனை அடுத்து கைது செய்யப்பட்ட தம்பதியினர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply