கட்டுநாயக்க – அபுதாபி இடையே ஆரம்பமாகிறது விமான சேவை!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் அபுதாபி விமான நிலையத்திற்கும் இடையில் குறைந்த கட்டண விமான சேவையை ஆரம்பிப்பதற்கு இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை சான்றிதழை வழங்கியுள்ளது.

விமான சேவையின் நிறுவனக் கட்டமைப்பு மற்றும் பயணிகளின் பாதுகாப்பு, வினைதிறன்மிக்க விமான நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களின் அடிப்படையில் இதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எயார் ஏசியா அபுதாபி ஏர்லைன் நிறுவனத்திற்கு நேற்று விமான நடவடிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்படி இந்த விமான நிறுவனம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து தனது விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply