விமான நிலையங்களை அண்மித்திருப்பவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை!!

இலங்கையில் விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்போர் சுமார் 5km சுற்றுவட்டத்தில் பட்டம் விடுவதற்கு வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தடை விதித்துள்ளது.

குறிப்பாக இலங்கையில் இயங்கும் 5 விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்போருக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள விமான நிலையம், மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம், யாழ் சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு ரத்மலான சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் அருகில் வசிப்போருக்கே குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விமான நிலைய சுற்றுப்பரப்பினுள் பட்டம் விடுவதன் காரணமாக விமான ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்படுவதாகவும் குறிப்பாக பட்டங்கள் விமான விசிறிக்குள் சிக்கும் பட்சத்தில் அவை பாரிய சேதத்தை விளைவிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply