இலங்கை ஏதிலி தமிழகத்தில் மாயம்!

இந்தியா தமிழகம்  மண்டபம் ஏதிலிகள் முகாமில் இருந்த 29 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பெண்ணை கடந்த ஜுலை மாதம் 27 ஆம் திகதி முதல் காணவில்லை என முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் மண்டபம் ஏதிலிகள் முகாமில் தங்கி உள்ளதாக தமிழக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதுதொடர்பில் மண்டபம் பொலிஸ் நிலையத்தில், முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது கணவர் குறித்த முறைப்பாட்டைப் பதிவு  செய்துள்ளதாகவும் மண்டபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply